×

பவுஞ்சூர் அருகே டெய்லரிடம் பணம், செல்போன் பறிப்பு

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த அடையாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (40). இவர் நெல்வாய் பாளையம் கூட்ரோடு பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகின்றார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் தனது கடையை அடைத்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நெற்குணப்பட்டு அருகே, பல்சர் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் பாஸ்கரை வழி மறித்து, ஆயுதங்களால் பலமாக தாக்கியுள்ளனர்.

பின்னர், பாஸ்கர் கூச்சலிடவே, அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் பாஸ்கர் தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக பாஸ்கர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிபறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.

The post பவுஞ்சூர் அருகே டெய்லரிடம் பணம், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Cash ,Pounjoor ,Seyyur ,Bhaskar ,Inducherry ,Paunjur ,Chengalpattu district ,Nelwai Palayam Kootrodu ,Dinakaran ,
× RELATED ஜார்கண்ட் அமைச்சரின் உதவியாளர்...